
பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையில் கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (10)நடைபெற்ற உலக கிண்ண 20க்கு20 தொடரில் 12 ஆவது போட்டியில் 32 ஓட்ட வித்தியாசங்களில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
நாணய சுழற்சியால் வெற்றி பெற்ற அமெரிக்கா அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை குவித்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை மட்டுமே பெற்று கொண்டது.
இதன் பிரகாரம்,இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
Follow Us



