
நைஜீரியாவில் நடைபெற்றுவரும் சர்வதேச மகளிர் T20 கிரிக்கெட் தொடரில், கானா அணிக்கு எதிரான போட்டியில் ருவாண்டா அணியின் 15 வயதுடைய வீராங்கனை ஃபேனி உடகுஷிமானிண்டே அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.
நைஜீரியாவின் லாகோஸ் நகரில் நைஜீரியா ‘இன்விடேஷனல்’ மகளிர் T20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் நேற்று (20) நடைபெற்ற போட்டியில் ருவாண்டா மற்றும் கானா அணிகள் மோதின.
இந்தப் போட்டியின் மூலம் சர்வதேச T20 கிரிக்கெட்டில் அறிமுகமான ருவாண்டா வீராங்கனை ஃபேனி உடகுஷிமானிண்டே, 65 பந்துகளில் 17 பவுண்டரிகளுடன் 111 ஓட்டங்களை எடுத்தார்.
Follow Us



