விளையாட்டு
Trending

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஒலிம்பிக்கில் விளையாடத் தடை!

ஒலிம்பிக் போட்டிகளில் பெண் வீராங்கனைகளுக்கான பிரிவில் பங்கேற்பதற்கு உயிரியல் ரீதியாகப் பெண் என்பதை உறுதிப்படுத்தும் மரபணு சோதனை இனி கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பைச் சர்வதேச ஒலிம்பிக் குழு நேற்று(26) வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் வெளியாகியுள்ள இந்தத் தீர்மானத்தின்படி, 2028 இல் ‘லொஸ் ஏஞ்சல்ஸ்’ ஒலிம்பிக்கில் இருந்து, மூன்றாம் பாலினத்தவர்கள் பெண் பிரிவில் போட்டியிடுவது முற்றுமுழுதாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான உடல் வளர்ச்சியைப் பெற்றவர்கள், பெண் பிரிவில் போட்டியிடுவது சமமான போட்டியாக இருக்காதெனவும், அது பாதுகாப்பற்றதெனவும், IOC தலைவர் கிர்ஸ்டி கோவென்ட்ரி விளக்கமளித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button