
முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி” யாழ்.சாவகச்சேரி நகரை இன்று(13) காலை 10.30 மணியளவில் வந்தடைந்தது.
யாழ் நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலய முன்றலிலிருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய தனது பயணத்தை நினைவு ஊர்தி நேற்று(12) காலை ஆரம்பித்தது.

நல்லூரிலிருந்து புறப்பட்ட முள்ளிவாய்க்கால் ஊர்தி நேற்று(12) யாழ்.நகரப் பகுதிகளில் வலம் வந்தது.
அதனைத் தொடர்ந்து இன்று(13) ஏ9 வீதியூடாக தொன்மராட்சி பிரதேசத்தின் நாவற்குழி, கைதடி, சாவகச்சேரி மற்றும் கொடிகாமம் ஆகிய இடங்களை வலம்வந்தது.
இன்று பிற்பகலில் வடமராட்சி நோக்கி பயணிக்கும் ஊர்தி, வடக்கு கிழக்கிலுள்ள 8 மாவட்டங்களையும் சென்றடைந்து, மே 18 திகதி காலை முள்ளிவாய்க்கால் வந்தடையவுள்ளது.




Follow Us



