
தாய்லாந்து – பேங்கொக் நகரிலுள்ள மதுபானக்கியில் இடம்பெற்ற தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம்நேற்று (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பின்பு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Follow Us



