இலங்கைஉலகம்குற்றவியல்வடக்கு மாகாணம்
சேர்ந்து மது அருந்திய போது தந்தையை கொன்ற மகன்!

மதவாச்சி, கடவத்தகம பிரதேச வீடொன்றில் தந்தையோடு சேர்ந்து மது அருந்திய மகன் அவரை அடித்துக் கொன்றுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் மூத்த மகனுடன் சேர்ந்து மது அருந்தியதாகவும், அதன்போது ஏற்பட்ட தகராறின் காரணமாக மகன் மரக்கட்டையால் தந்தையை தாக்கி கொலை செய்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மூத்த மகனே இந்த கொலையைச் செய்துள்ளார். 47 வயதான உயிரிழந்தவருக்கு, இரண்டு மகன்கள் உள்ளனர்.
அதனையடுத்து சந்தேகநபரான 42 வயதுடைய மகன், கைது செய்யப்பட்டுள்ளார்.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
சந்தேக நபர் மனநலக் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதவாச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow Us



