
திருகோணமலை சோமாவதி பகுதியில் மகாவலி கங்கையை குறுக்கறுக்கும் ஆற்றில் நீராடச் சென்ற நால்வரில் மூவர் காணாமல் போயுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று(14) இடம்பெற்றுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை உட்பட நால்வர் மகாவலி கங்கை குறுக்காகச் செல்லும் ஆற்றில் நீராடியுள்ளனர்.
இதன்போது, மூவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Follow Us



