Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
இலங்கைஉலகம்மங்கையர் அரங்கம்வடக்கு மாகாணம்

உலக சாதனை படைத்த குமுதினி கோபாலகிருஷ்ணன்: அமெரிக்கரின் சாதனையையும் முறியடிப்பு!

உலகின் மிகப்பெரிய மெழுகுவர்த்தி தாங்கிகள் 777 சேகரிப்பு எனும் முயற்சியில் குமுதினி கோபாலகிருஷ்ணன் உலக சாதனை படைத்துள்ளார்.

இந்த உலக சாதனை நிகழ்வு கிளிநொச்சி முறிகண்டியில் மூவரடங்கிய நடுவர் குழாம் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் நேற்றிரவு(01) நிகழ்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் குமுதினி கோபாலகிருஷ்ணன் இடம் பிடித்துள்ளார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

மேலும், அமெரிக்காவின் ரிம் அண்ட் சென்னை டஃபி (Tim and Cindy Duffy) நிகழ்த்திய 527 மெழுகுவர்த்தி தாங்கிகள் சேகரிப்பு என்ற சாதனையையும் இதன் மூலம் குமுதினி கோபாலகிருஷ்ணன் முறியடித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட குமுதினி கோபாலகிருஷ்ணன், கனடாவில் வசித்து வருகிறார்.

கேண்டில்ஸ் பியூட்டி(Candle Beauty) நிறுவனத்தின் இயக்குநராகவும் அவர் திகழ்கிறார்.

தனது 30 வருட கால முயற்சியின் பயனாக தாய்நாட்டில் இந்த சாதனையை நிகழ்த்த முடிந்தமை பெருமைக்குரிய விடயம் என குமுதினி கோபாலகிருஷ்ணன் இதன்போது தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button