இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்

யாழ் மாவிட்டபுரம் கந்தனுக்கு இன்று கொடியேற்றம்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவப் பொருவிழா இன்று (19) கொடியேற்றத்தொடு ஆரம்பமாகியது.

முருகப்பொருமானுக்கு அதிகாலையில் இருந்து சிறப்பு அபிசேக ஆராதனைகள் நடைபெற்று காலை மூர்த்திகளுக்கு வசந்த மண்டப பூசைகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து முருகப் விநாயகப் பெருமான், சிவன் உமாதேவியார் சமேதராயும்,வள்ளி தெய்வானை சமேதராயும் வசந்த மண்டபத்திலிருந்து கொடித் தம்பத்திற்கு எழுந்தருளி
கொடியேற்றம் சிறப்பாக நடைபெற்றது.

இன்று ஆரம்பமாகிய மாவை கந்தனின் வருடாந்த மகோற்சவ பெருவிழா, 25 நாட்கள் இடம்பெறவுள்ளது.

மகோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி தேர்த் திருவிழாவும் 12 ஆம் திகதி ஆடி அமாவாசை தினத்தன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் தீர்த்த உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button