

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை, புதுவளவு, வேவில்ஒழுங்கு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீடு பயனாளிகளிடம் இன்று (12) கையளிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், உள்நாட்டலுவல்கள்,மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, யாழ்.மாநகரசபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன், பருத்தித்துறை பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து உடுப்பிட்டி வட்டாரம் இரண்டிற்கான வட்டார சபை அமைக்கும் உலகடி நிகழ்வு இராசலிங்கம் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றது.

Follow Us
