இலங்கைஉலகம்மேல்மாகாணம்
Trending

அளுத்கமவில் ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியதில் சாரதி பலி!

களுத்துறை, அளுத்கம, -டிப்போ வீதியில் அமைந்துள்ள தொடருந்து கடவையில் முச்சக்கரவண்டி ரயிலுடன் மோதுண்டதில் முச்சக்கரவண்டிச் சாரதி உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.

மருதானையிலிருந்து ஹிக்கடுவை நோக்கிப் பயணித்த அலுவலக அதிவேக ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதியுள்ளது.

ரயில் கடவையை கடக்க முற்பட்டபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button