இலங்கைவடக்கு மாகாணம்

மாடு மேய்க்கச் சென்றவர் சடலமாக மீட்பு!

பரந்தன் – முல்லைத்தீவு A-35 வீதியில் அமைந்துள்ள பாலத்தின் கீழ்ப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற குடும்பஸ்தார் நீர்நிலையில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று(27) மாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும், தெரியவருவதாவது,

அனர்த்தால் சேதமடைந்த பரந்தன் – முல்லைத்தீவு A 35 வீதியில் அமைந்துள்ள பாலம், இந்திய இராணுவத்தால் புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக அண்மையில் திறந்து விடப்பட்டது.

பாதையை புனரமைப்பதற்காக தற்காலிகமாக இடப்பட்ட வீதியால் பயணித்து பாலத்தின் கீழ்பகுதியில், மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோதே குறித்த குடும்பஸ்தர் நீர் நிலையில் தவறிவீழ்ந்துள்ளார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

அதனையடுத்து இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து நேற்றிரவு 11.00 மணியளவில் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.

புளியம்பொக்கணை – பெரியகுளத்தைச் சேர்ந்த 50 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button