
கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.
கிளிநொச்சி தர்மபுரம் புன்னைநீராவி பகுதியில் அமைந்துள்ள தனியார் கடைச்சல் தொழிலகத்தில் குறித்த விபத்து நேற்று(09) இடம்பெற்றுள்ளது.
கடைச்சல் தொழிலில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இளைஞனை மின்சாரம் தாக்கியுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us



