Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கைஉலகம்

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து அறிவிப்பு!

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிக்குப் பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளதாகவும், முதலாம் கட்டம் மார்ச் 12 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையும், இரண்டாம் கட்டம் ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சாதாரண தரப் பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் ஏப்ரல் 22 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை நடத்தப்படவுள்ளது.

அந்தப் பணி நிறைவடைந்ததும் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதித் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button