
இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தில், வடக்கு கிழக்கில் போராட்டங்கள் இன்று(04) முன்னெடுக்கப்பட்டன.

வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்தவகையில், கிளிநொச்சி – கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் ஏ 9 வீதியூடாகப் பயணித்து டிப்போ சந்தியிலுள்ள பசுமைப் பூங்காவில் நிறைவடைந்தது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,பொது அமைப்புகள்,காணாமல் போனவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Follow Us



