இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

சுதந்திர தினத்தில் வடக்கு கிழக்கில் போராட்டம்!

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தில், வடக்கு கிழக்கில் போராட்டங்கள் இன்று(04) முன்னெடுக்கப்பட்டன.

வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும், போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அந்தவகையில், கிளிநொச்சி – கந்தசுவாமி கோயில் முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம் ஏ 9 வீதியூடாகப் பயணித்து டிப்போ சந்தியிலுள்ள பசுமைப் பூங்காவில் நிறைவடைந்தது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற போராட்டத்தில், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,பொது அமைப்புகள்,காணாமல் போனவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button