இலங்கைகிழக்கு மாகாணம்
Trending

திருகோணமலையில் கரையொதுங்கிய டொல்பின்!

திருகோணமலை , ஈச்சிலம்பற்று, சல்லி கடற்கரையில் டொல்பினொன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த டொல்பின் இன்று(06) காலை இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

இந்த டொல்பின் சுமார் 5 அடி நீளம் கொண்ட சிறிய டொல்பின் என தெரியவருகிறது.

மேலும், மற்றுமொரு டொல்பின் அதே இடத்தில் உயிருடன் கரையொதுங்கி பின்னர் கடற்றொழிலாளர்களால் கடலுக்குள் அனுப்பப்பட்டுள்ளது.

இதனையடுத்து, குறித்த இடத்திற்கு சேருநுவர வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்து இறந்த நிலையில் காணப்பட்ட டொல்பினை அப்புறப்படுத்தியுள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button