
பிலிப்பைன்ஸில் இன்று(08) இடம்பெற்ற நிலநடுக்கத்தால் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, 129 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் பிலிப்பைன்ஸின் மின்டானோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள சரங்கனி, ஜெனரல் சாண்டோஸ் ஆகிய நகரங்களில் ஏற்பட்டுள்ளது.
இன்று (8) காலை 7.8 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், 10 கிலோ மீற்றர் கடல் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், கட்டிடங்கள் பலவும், பாலங்களும் சேதமடைந்துள்ளன.

Follow Us



