இலங்கைஉலகம்தென் மாகணம்

வீரவில விபத்தில் நால்வர் பலி!

அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதி – வீரவில பகுதியில் இரு அரச பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பம் இன்று (18) முற்பகலில் இடம்பெற்றுள்ளதாக வீரவில பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதோடு33 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை வைத்துயசாலையிலும், தெபரவாவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பேருந்துமே நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button