Ads: ☀️ STAY IN STM COMFORT – BOOK NOW!

இலங்கை
Trending

பளையில் டிப்பருடன் மோதுண்டு வயோதிபர் பலி!

கிளிநொச்சி பளை நகரில் டிப்பரும், மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று(29) பிற்பகலில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், சோரன்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயதான குமாரசாமி செல்வவதி வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து பளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும், பளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த வயோதிபரே உயிரிழந்துள்ளார்.

Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

அதனையடுத்து,டிப்பர் வாகனத்தின் சாரதி பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button
Dreams Creations Photo & Video