இலங்கைஉலகம்குற்றவியல்வடக்கு மாகாணம்
பதுக்கிய 500 லீற்றர் எரிபொருள் மீட்பு: ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் பதுக்கி வைத்து கறுப்புச் சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட 500 லீற்றர் மண்ணெண்னை கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தச் பதுக்கல் சம்பவம் யாழ்.வடமராட்சி மந்திகைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

அதனையடுத்து வாகனத்தின் சாரதியைக் கைது செய்துள்ள பொலிஸார், மண்ணெண்ணை ஏற்றிச் சென்ற வாகனம் தடுத்து வைத்துள்ளனர்.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!

Follow Us



