
வடக்கிற்கான புகையிரத சேவைகள் நாளை(09) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் ஐந்து பாலங்களை மாற்றியமைக்கவும்,


யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையைப் புனரமைக்கவும் வடக்கிற்கான புகையிரத சேவைகள் ஜனவரி 26 ஆம் திகதி முதல் இடை நிறுத்தப்பட்டிருந்தது.


இந்த நிலையில், சித்திரை புதுவருடப் பிறப்பை முன்னிட்டு, வடக்கிற்கான சேவைகள் நாளை முதல் மீளவும் இடம்பெறவுள்ளன.
இதன் முதலாவது சேவை கொழும்பிலிருந்து காங்கேசந்துறை வரை இடம்பெறவுள்ளது
Follow Us



