
வெள்ள அனர்த்தம் காரணமாக யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் 137 குடும்பங்களை சேர்ந்த 425 பேர் 09 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சாவகச்சேரி சக்தி அம்மன் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலுள்ள இடைத்தங்கல் முகாமில் 75 குடும்பங்களை சேர்ந்த 254 பேரும், சாவகச்சேரி திருவள்ளுவர் சனசமூக நிலைய இடைத்தங்கல் முகாமில் 40 குடும்பங்களைச் சேர்ந்த 156 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டுவருகிறது.

Follow Us



