
சிம்பாவே மற்றும் இந்திய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற T20 உலகக்கிண்ண 48 ஆவது போட்டியான சூப்பர் 8 சுற்றின் 8 ஆவது போட்டியில், இந்திய அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை சிதம்பரம் விளையாட்டரங்கில் நேற்றிரவு(26) நடைபெற்ற இந்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாவே அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது.
அதற்கமைய துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டைகளை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்றது.
இந்திய அணி சார்பாக அபிஷேக் சர்மா (Abhishek sharma) 30 பந்துகளில் 55 ஓட்டங்களை பெற்றார்.
257 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்படுத்தாடிய சிம்பாவே அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
சிம்பாவே அணி சார்பாக (Brain bennelt) 59 பந்துகளில், 97 ஓட்டங்களை பெற்றார்.
அதிரடியாக விளையாடிய இந்திய அணி வீரர் ஹார்த்திக் பாண்டியா (Hardik pandiya) ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.



