
நாட்டின் சில பகுதிகளில் நிலவும் மழையுடனான கூடிய காலநிலை காரணமாக, ஐந்து மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை,குருணாகல், மாத்தளை, மொனராகலை, இரத்தினபுரி ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் அவதானமாக இருக்குமாறும், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us



