
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் பிரசாத் ரணசிங்க இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு முன்னெடுத்துவரும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த ஆணைக்குழுவில் நடைபெற்று வந்த விசாரணைகளில் தலையீடு செய்ததாகவும், விசாரணை நடவடிக்கைகளை பாதிக்கக் கூடிய செயல்களில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Ads: 🌟 STAY IN STM COMFORT – BOOK NOW!
Follow Us



