இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் போராட்டம்!

வெளி மாவட்டங்களில் சேவையாற்றும் யாழ்ப்பாண மாவட்ட ஆசிரியர்கள், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக இன்று(24) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வடக்கின் ஏனைய மாவட்டங்களில் கடந்த 9 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், 7 வருடங்களில் வழங்க வேண்டிய இடமாற்றங்கள் 9 வருடங்களைத் தாண்டியும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்தே, ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போபோது வடக்கு மாகாண ஆளுநருரிடம் மகஜர் ஒன்றையும் ஆசிரியர்கள் கையளித்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button