இலங்கைஉலகம்
Trending

நேற்று நள்ளிரவு முதல் பெற்றோல் விலை உயர்வு!

எரிபொருளின் விலைகள் நேற்று(31) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, டீசல் 15 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 407 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டு 478 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெற்றோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 434 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 495 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

மண்ணெண்ணெய் 20 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 285 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

Swing Ad
Tamil World Radio Ad

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button