இலங்கைஉலகம்வடக்கு மாகாணம்
Trending
யாழ்.பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!

யாழ்.பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.
உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டுவரும் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி, எதிர்வரும் மார்ச் மாதம் 25 ஆம் திகதி முதல் துணைவேந்தர் ஆக நியமனம் பெறுகிறார்.
அண்மையில் இடம்பெற்ற துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளை பெற்று முதன்மை நிலையை பேராசிரியர் வேல்நம்பி பெற்றிருந்தார்.
அத்தோடு துணைவேந்தர் தேர்தலில் கடந்த மூன்று தடவைகள் முதல் மூன்று இடங்களுக்குள் அவர் தெரிவாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Follow Us



