
யாழ். செம்மணி சிந்துபாத்தி மனித புதைகுழி அகழ்வின் மூன்றாம் கட்ட நேற்றைய (22) 40 ஆம் நாள் அகழ்வுப் பணியின் போது 4 என்புக் கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும் 11 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம் , மூன்று கட்ட அகழாய்வுகளிலும் இதுவரை 471 என்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 455 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்தின் 08 பேர் கொண்ட குழுவினர் நேற்றைய தினம், அகழ்வு பணியை நேரில் சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Follow Us



