
பிரித்தானியாவின் இளநிலை வெளிவிவகார அமைச்சராக உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 22ஆம் திகதி இந்த நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனுடன், உமா குமரன், பிரித்தானிய அரசின் உதவி கொறடா பொறுப்பையும் வகிக்கவுள்ளார்.
இலங்கையின் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த உமா குமரனின் பெற்றோர், உள்நாட்டுப் போர்க் காலத்தில் பிரித்தானியாவுக்குப் புலம்பெயர்ந்தனர்.
லண்டனில் பிறந்து வளர்ந்த உமா குமரன், 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பிரித்தானிய பொதுத் தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போ தொகுதியில் தொழிற்கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போது பிரித்தானியாவின் வெளிவிவகார பொதுநஒலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் இளநிலை வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மேலும் அவர், சர்வதேச உறவுகள் மற்றும் வெளிநாட்டுக் கொள்கை தொடர்பான பணிகளில் பங்காற்றவுள்ளார்.
இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரித்தானிய அரசின் முக்கிய துறையான வெளிவிவகார அமைச்சுப் பொறுப்பை ஏற்றிருப்பது, உலகம் முழுவதும் வாழும் இலங்கையர்களுக்கு பெருமை சேர்க்கும் சாதனையாக அமைந்துள்ளது.
அந்தவகையில், மங்கையர் அரங்கம் சார்பாகவும் உமா குமரனை வாழ்த்துவதில் பெரு மகிழ்வடைகிறோம்.




